மட்டக்களப்பில் மேலும் இருவருக்கு கொரோனா - மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு! - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

மட்டக்களப்பில் மேலும் இருவருக்கு கொரோனா - மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டிப்பளை - மாவடிமுன்மாரி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருமாக இருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று (30.10.2020) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார். 

இவ்விரு தொற்றாளர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் மேலும் தெரிவித்தார். 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாகவும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற வேளை கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதனை தொடர்ந்து, அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிகிச்சைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment