கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 14 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 14 பேருக்கு கொரோனா

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

குறித்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது. 

அதன் பின்னர் அவருடன் தொடர்புகளை பேணிய ஏனைய 20 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 13 பேர் கொரோனா தொற்றுக்கு உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment