சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் பதவிக்கு பேராசிரியர் பாலித கோஹனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
அரசாங்க இராஜதந்திரியாகிய பாலித கோஹன, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் நிரந்தர பிரதிநிதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்தோடு, கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் பேராசிரியர் பாலித கோஹன கடமையாற்றியுள்ளார்.
குறித்த பதவி தொடர்பாக முன்மொழியப்பட்ட அவரது பெயர், உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment