20ஆவது திருத்த குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 15, 2020

20ஆவது திருத்த குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (16) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

இக்குழுவில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பேர் அடங்குகின்றனர்.

குறித்த குழுவானது, நேற்று முன்தினம் (14) கூடியிருந்ததோடு, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நேற்று (15) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளித்தது. இதற்கமைய, குறித்த அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment