8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் பலி - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் பலி - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா

கொரோனா நெருக்கடி...மக்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் உலக  நாடுகள்...வலுக்கும் எதிர்ப்பு!governments tightens surveillance amidst  corona pandemic
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 77 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 1,87,224
பிரேசில் - 1,20,896
மெக்சிகோ - 64,158
இந்தியா - 63,498 
இங்கிலாந்து - 41,499
இத்தாலி - 35,477
பிரான்ஸ் - 30,606
ஸ்பெயின் - 29,011
பெரு - 28,788
ஈரான் - 21,462

No comments:

Post a Comment