இலங்கை எப்போதுதான் பாடங்கற்றுக் கொள்ளப் போகிறது ? - மங்கள கேள்வி - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

இலங்கை எப்போதுதான் பாடங்கற்றுக் கொள்ளப் போகிறது ? - மங்கள கேள்வி

(நா.தனுஜா) 

போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் கடந்த காலத்தை மறந்து, அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைவதற்காக சந்தர்ப்பம் உருவானது. ஆனால் அதற்குப் பதிலாக வெற்றிகரமானதொரு களியாட்டப் பெரும்பான்மைவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியிருக்கிறார். 

நாட்டில் 3 தசாப்த காலமாக இடம்பெற்ற போர் முடிவிற்கு வந்து இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கின்றன. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் மங்கள சமரவீர மேலும் கூறியிருப்பதாவது, 

நமது நாட்டை அழித்து வந்த போர் 11 வருடங்களுக்கு முன்னர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. கடந்த காலத்தை மறந்து அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பம் உருவானது. 

ஆனால் அதற்குப் பதிலாக வெற்றிகரமானதொரு களியாட்டப் பெரும்பான்மைவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது தற்போது புதியதொரு வாழ்க்கையை குத்தகைக்கு வழங்கியிருக்கிறது. இலங்கை எப்போது தான் பாடங்கற்றுக் கொள்ளப் போகிறது? என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment