குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்பதோடு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் மருந்துக் களஞ்சியத்திலுள்ள மருந்துகளை பாதுகாப்பாக வெளியில் கொண்டு வரும் நடவடிக்கைகளில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேசவாசிகள், பொலிசார், இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment