இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று (05) மாலை 7.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 171 இலிருந்து 174 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் (05) இதுவரை 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 174 பேரில் தற்போது 140 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது வரை 05 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 259 பேர் கொரோனா தொற்று தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment