நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸினால் கல்முனை பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிதியினை வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சரின் கல்முனை காரியாலயத்தில் இன்று காலை (26) வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதன் போது கல்முனை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கான நிதியினை கல்முனை பொதுப்பணி மன்ற தலைவரும் தொழிலதிபருமான் அல்ஹாஜ் என்.எல்.அமீர் (நயீர்), செயலாளர் எல்.சர்ஜூன் ஆகியோரிடம் கையளித்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment