ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடியும் அறிவித்தார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் - இன்று நள்ளிரவின் பின்னர் கலைக்கப்படுமா? - News View

About Us

About Us

Breaking

Sunday, March 1, 2020

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடியும் அறிவித்தார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் - இன்று நள்ளிரவின் பின்னர் கலைக்கப்படுமா?

எட்டாவது பாராளுமன்றத்திற்கு இன்றுடன் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இன்று (01) நள்ளிரவுடன் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதிக்கு இந்த அதிகாரங்கள் கிடைக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக 19 ஆவது அரசியல் யாப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைய பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முடியும்.

2015 ஆகஸ்ட் 17 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் 2015 செப்டம்பர் முதலாம் திகதி, பாராளுமன்றம் கூடியது. அரசியலமைப்பிற்கு அமைய பாராளுமன்றத்தின் முதற் கூட்டத் தொடரிலிருந்து, 4 வருடங்களும் 6 மாதங்களும் கடந்த பின்னர், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும், பெப்ரவரி மாதம் நிறைவடைவதுடன், நான்கரை வருடங்கள் பூர்த்தியாகின்றன. 

இதன்பிரகாரம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்காக அதிகாரம் கிடைக்கவுள்ளது. சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இன்றைய தினத்தின் பின்னர், அதாவது மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் எவ்வேளையிலும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. 

இதனடிப்படையில் நாளைய தினத்திற்குள், அல்லது அதன் பின்னர் அல்லது ஆகஸ்ட் செப்டம்பர் மாதம் வரை பாராளுமன்றத்தை கொண்டு செல்வதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு உள்ளது. 

பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கும் பட்சத்தில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரான 10 முதல் 17 நாட்களுக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நாள், வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், 5 அல்லது 6 வாரங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் பாராளுமன்றம் மீண்டும் கூடும் திகதி உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியிடப்பட வேண்டும். 

வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டதன் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கிடைக்கும், அதன் பின்னர் தெரிவத்தாட்சி அதிகாரிகள் யார்? கட்டுப்பணம் எவ்வளவு? தேர்தலில் புள்ளியிடுதல் ஆகிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்படும். அதன் பின்னரே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்த முடியும். 

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டதன் பின்னரே ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் நடத்தப்படவுள்ள தேர்தல்களுக்கு, 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்பட்டியலே பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேர்தலுக்கான ஆரம்ப பணிகளை தேர்தல்கள் திணைக்களம் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த முறை தேர்தலுக்காக 6 லட்சத்து தொடாக்கம் 7 லட்சம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவாக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்ளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment