இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி குறித்த வர்த்தமானியானது அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு இன்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டால் பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்பதும் குறிப்பிடகுறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment