கொரோனா வைரஸ் தொற்று என்பது அது மிகப் பெரியதொரு பிரச்சினை இல்லை - ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 19, 2020

கொரோனா வைரஸ் தொற்று என்பது அது மிகப் பெரியதொரு பிரச்சினை இல்லை - ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் தொற்று என்பது அது மிகப் பெரியதொரு பிரச்சினை இல்லை என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ . எல் . எம் . அதாவுல்லாஹ் தெரிவித்தார் .

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துரைத்த அவர் இது தடிமன் போன்று ஒரு புதிய நோயாகும் என்றும் நாம் நினைப்பதைப் போன்ற பெரியதொரு நோய்த் தொற்றாக இதனைக் கருத அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார் . 

இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், தடிமனை விடவும் சிறிய நோயாக இந்த வைரஸ் தொற்று மாறிவிடும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment