நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச்சந்தையின் S&P SL20 5.33% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 2.61% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment