கல்முனை பிராந்தியத்தில் 172 மாணவர்களுக்கு பரிசில் வழங்கி கௌரவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2020

கல்முனை பிராந்தியத்தில் 172 மாணவர்களுக்கு பரிசில் வழங்கி கௌரவிப்பு

பாறுக் ஷிஹான்

கல்முனை பிராந்தியத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற பல்வேறு பாடசாலைகளை சேர்ந்த 172 மாணவர்களுக்கு பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

அம்பாறை மாவட்டம் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் வியாழக்கிழமை (27) மாலை 4 மணியளவில் கல்லூரி முதல்வர் அருட்சகோதர் செபமாலை சந்தியாகு தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் கபில திஸ்ஸ நாயக்க கல்முனை பிராந்திய முகாமையாளர் இ வங்கி ஊழியர்கள் இ மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment