மார்ச் மாதம் 02 ஆம் திகதி நள்ளிரவு பாராளுமன்றம் நிச்சயம் கலைக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2020

மார்ச் மாதம் 02 ஆம் திகதி நள்ளிரவு பாராளுமன்றம் நிச்சயம் கலைக்கப்படும்

(இராஜதுரை ஹஷான்) 

மார்ச் மாதம் 02 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு பாராளுமன்றம் நிச்சயம் கலைக்கப்படும் என நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

அத்துடன் பொதுஜன பெரமுனவில் தற்போது அங்கம் வகிக்கும் 90 உறுப்பினர்களுக்கும், மேலதிகமாக 30 உறுப்பினர்களுக்கும் வேட்பு மனுத்ததாக்கல் வழங்கப்படும். 

தமிழ் - முஸ்லிம் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் அவர் கூறினார். 

பாராளுமன்றத்தின் பதவி காலம் நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒரு வார காலம் உள்ள நிலையில் அவ் விடயம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment