தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவன் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2019

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவன் உயிரிழப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவன் ஒருவர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் பூண்டுலோயா - டண்சில் வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி. துர்கேஷ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த இந்த மாணவன், பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார் . 

மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment