நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய நபர் அதற்கு பயன்படுத்திய படகுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வந்த பொலிஸ் குழுவினர் படகினை மீட்டுள்ளதோடு, படகின் வெளியிணைப்பு இயந்திரம் மீட்கப்படவில்லை எனவும், படகின் உரிமையாளரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வந்தி தொடர்பிலான வழக்கு விசாரணைகளை கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் வருகை தந்து தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கமைய செவ்வந்தியை இந்தியாவிற்கு அழைத்து செல்ல உதவிய நபர்கள், யாழ்ப்பாணத்தில் செவ்வந்தி தங்கியிருப்பதற்கு இடமளித்தோர், அதற்கான ஏற்பாடுகளை செய்தோர் என பல்வேறு தரப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸ் விசேட குழுவினரே முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
செவ்வந்தி தப்பிச் செல்ல பயன்படுத்திய குறித்த படகு யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரை வலு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றவியல் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னரே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment