பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய Whats App இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளின்போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த Whats App இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 071 8598888 என்ற புதிய Whats App இலக்கம் இன்று (13) முதல் செயல்படும்.
இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், வீடியோக்கள் மற்றும் படத் தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment