சீனாவில் நடைபெற்ற முதல் உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 17, 2025

சீனாவில் நடைபெற்ற முதல் உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள்

சீனாவின் பெய்ஜிங் நகரில், முதல் உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் ஓகஸ்ட் மாதம் 14 முதல் இன்று (17) வரை நடைபெற்றன.

இந்த நிகழ்வில் 16 நாடுகளைச் சேர்ந்த 280 குழுக்களில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றன. 

தடகளம், கால்பந்து, போன்ற வழக்கமான விளையாட்டுப் போட்டிகளுடன், மருந்து பிரித்தல் மற்றும் தூய்மைப் பணிகளுக்கான பொருட்களைக் கையாளுதல் போன்ற நடைமுறை வேலைகளும் இதில் அடங்கும்.

மனித உருவ ரோபோக்களில் முன்னணி நாடாக மாறிவரும் சீனாவின் பரந்த தேசிய திட்டத்தின் முக்கிய பகுதியாக இந்த விளையாட்டுகள் உள்ளன. 

2027 க்குள் உலகத் தரம் வாய்ந்த மனித உருவ ரோபோ துறையை உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தை சீன அரசு வைத்துள்ளது. ரோபோக்களின் பெருமளவிலான உற்பத்தி மற்றும் அவை பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய உந்துசக்தியாக செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

புதிய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கான நிதி போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தத் தொழிலுக்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது. மேலும், தொழில்துறை ரோபோக்களுக்கான உலகின் மிகப்பெரிய சந்தையாகவும் சீனா ஏற்கனவே மாறியுள்ளது.

உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள், இயந்திர வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் சென்சர் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சோதித்து வெளிப்படுத்தும் ஒரு தளமாக செயல்படுகின்றன. 

சில ரோபோக்கள் சிறப்பாக செயல்பட்டாலும், சில ரோபோக்கள் கீழே விழுந்து தடுமாறின. 

இந்த விளையாட்டுகள், எதிர்காலத்தில் தொழிற்சாலைகள், வீடுகள் மற்றும் பிற நிஜ உலக அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ரோபோக்களை சோதனை செய்து மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக அமைப்பதாக ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்பாளர்களும் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment