பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பஸ்ஸின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்ததோடு, மேலும் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment