மீண்டும் விளக்கமறியலில் அநுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 11, 2025

மீண்டும் விளக்கமறியலில் அநுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர்

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (11) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை எந்தவொரு பிணை நிபந்தனை அடிப்படையிலும் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரய இன்று (11) இரண்டாவது தடவையாகவும் நிராகரித்தார்.

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு போலியான தகவல்களை சமர்ப்பித்து பிரதிவாதியொருவரை வழக்கிலிருந்து விடுவித்தமை தொடர்பில் சந்தேகநபரான அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட இவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment