ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் : கட்டார் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 23, 2025

ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் : கட்டார் தெரிவிப்பு

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை இன்று திங்கட்கிழமை (23) இரவு ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக கட்டாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டார் தலைநகர் டோஹாவின் தென்மேற்கே 24 ஹெக்டேயர் (60 ஏக்கர்) இல் அமைந்துள்ள அல் உதெய்த் விமானத் தளமானது அமெரிக்க மத்திய கட்டளையின் முன்னோக்கிய தலைமையகமாகும்.

1996 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்த இராணுவத் தளம் நிறுவப்பட்டது. இது, மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமாகும்,

தற்போது இந்த விமானத்தளம் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன் வெற்றிகரமாக தாக்குதலை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஏவுகணைகளை தங்களது வான் பாதுகாப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment