உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிலையியல் குழுக்களை தாமதமின்றி நிறுவுங்கள் : தயாரித்த மாதிரி துணைச் சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 13, 2025

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிலையியல் குழுக்களை தாமதமின்றி நிறுவுங்கள் : தயாரித்த மாதிரி துணைச் சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - கரு ஜயசூரிய

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் மாகாண ஆளுநர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிலையியல் குழுக்களை நிறுவுவதற்கான வர்த்தமானி தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலை தாமதமின்றி வெளியிடுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கருஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில், உலகெங்கிலும் உள்ள பிரதிநிதித்துவ அமைப்புகளில் முக்கிய பிரிவுகளாக இருக்கின்ற விடயம் நிலையியல் குழுக்களை நிறுவுவதாகும். இதுதொரு மிக முக்கியமான நடைமுறையுமாகும். இந்தக் குழுக்கள், வெளிப்படைத்தன்மை, மேற்பார்வையை மேம்படுத்துகின்றன. பொறுப்புக்கூறலை உறுதி செய்கின்றன உள்ளூராட்சி மன்றங்களின் ஒட்டு மொத்த செயற்றிறனை மேம்படுத்துகின்றன.

இலங்கையில் உள்ளூராட்சி தொடர்பான சட்டங்கள் நிலைக்குழுக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தாலும், அவற்றின் உருவாக்கம் மற்றும் செயற்பாடு குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் அவற்றில் இல்லை.

2011ஆம் ஆண்டிலும் - மீண்டும் 2018ஆம் ஆண்டிலும் தொடர்புடைய சட்டங்களில் வரைவுத் திருத்தங்களை உருவாக்கி, அத்தகைய தெளிவை வழங்கவும், குழுக்களில் குடிமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் உதவுகின்றன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, 2017 முதல் செயலற்ற தன்மை காரணமாக குறித்த குழுக்களின் முன்னேற்றம் தேக்கமடைந்துள்ளன. இந்த நீண்ட கால தாமதம் மேலும் தொடரக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றோம்.

மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்குப் பொருந்தக்கூடிய துணைச் சட்டங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் நிலையியல் குழுக்களை உடனடியாக நிறுவ வேண்டும்.

மேலும், கணினி கட்டமைப்புகள் மீண்டும் செயற்படுத்தப்படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. முந்தைய வரைவுகளின் அடிப்படையில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தயாரித்த மாதிரி துணைச் சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்பு செயன்முறை மற்றும் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தூய்மையான இலங்கை திட்டம் போன்ற முக்கிய தேசிய முயற்சிகளை செயற்படுத்துவதில் உள்ளூராட்சி மன்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக தற்போதைய கடன் நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் கட்டணங்களின் பின்னணியில் அவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது.

எனவே, நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்கானதொரு அத்தியாவசிய நடவடிக்கையாக நிலையியல் குழுக்களை நிறுவுவதுடன், தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிடுமாறு ஜனாதிபதியையும் அந்தந்த மாகாண ஆளுநர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.

No comments:

Post a Comment