கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர் நேற்று (19) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேகத்திற்குரிய மற்றைய பெண் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பிரதான சந்தேகநபருக்கு உதவிய பெண் சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரான பெண்ணின் விபரங்கள்
பெயர்
பிங்புர தேவகே இஷார செவ்வந்தி
வயது
25
தேசிய அடையாள அட்டை இலக்கம்
995892480V
முகவரி
இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கடுவெல்லேகம.
அதன்படி புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் 071 8591727 அல்லது கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி 071 8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் பற்றி தகவல்களை வழங்குபவர்களுக்கு பொலிஸ் நன்கொடை நிதியத்தின் மூலம் சன்மானம் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment