ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை தற்போதைய அரசாங்கமே அதிகரித்துள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, ஆசிரிய சேவையில் தற்போது இணையும் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 31,490 ரூபாவாகும். எனினும் ஏப்ரல் மாதத்தில் அது 39,211 ரூபாவாகவும் 3 வருடங்களின் பின் 53,060 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர், மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வரவு செலவு திட்டமாகும்.
2016ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. 9 வருடங்களுக்கு பின்னர் இம்முறை அது அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
அரச சேவையில் இணைந்துகொள்ளும் (பி.எல். 1) ஒருவருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அடிப்படைச் சம்பளமான 24,250 ரூபா, 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு தற்போது 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 17,800 ரூபாவும் வழங்கப்படுகிறது.
அதேபோன்று கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் அடிப்படைச் சம்பளம் 28,940 ரூபாவாகும். வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதற்கமைய அது 3 வருடங்களில் 50,630 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
அவர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் 21,690 ரூபா அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 17,500 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
மேலும், புதிதாக இணைந்து கொள்ளும் வைத்தியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 54,290 ரூபாவாகும். அது இந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் 91,750 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. அவர்களின் மேலதிக நேர கொடுப்பனவாக ஒரு மணித்தியாலத்திற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 687 ரூபா, ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் 764 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் தற்போது 37,260 ரூபாவாகும். அவர்களின் அடிப்படைச் சம்பளம் 63,640 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இந்த துறைக்கு புதிதாக இணைந்து கொள்பவருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் 10,606 ரூபா அதிகரிக்கப்படுகிறது.
இவ்வாறு அரச துறையின் அனைத்து தரப்பினரின் அடிப்படைச் சம்பளம் அவர்களின் சேவை காலத்தின் பிரகாரம் அதிகரிக்கப்படுகிறது. என்றாலும் இதனை சரியாக புரிந்துகொள்ளாத சிலர் இது தொடர்பில் விமர்சனங்களை தெரிவித்து வருவதை காண்கிறோம். அந்த விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்வதில்லை. இது எங்களுக்கு பழக்கப்பட்டதாகும். அடுத்துவரும் 5 வருடங்களில் நாட்டை கட்டியெழுப்பாமல் திரும்பிப்பார்ப்பதில்லை.
மேலும் ஆசிரியர் சேவையில் தற்போது இணையும் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 31,490 ரூபாவாகும். ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு 39,211 ரூபா கிடைக்கிறது. 3 வருடங்களில் 53,060 ரூபாவாக அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. 5 வருட சேவையில் உள்ள ஆசிரியரின் சம்பள அதிகரிப்பு 8,253 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இதுவல்லாமல் ஏனைய கொடுப்பனவுகளும் கிடைக்கிறது.
அது மாத்திரமல்லாது ஏப்ரல் மாதம் 1ஆம் திகதிக்கு 3 (1) பட்டதாரி ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்பவருக்கு 50,020 ரூபா அடிப்படைச் சம்பளமாக கிடைக்கிறது. அதற்கு ஏனைய கொடுப்பனவுகளும் அடங்குகிறது. 5 வருட சேவையில் உள்ள பட்டதாரிக்கு 8,982 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது.
அதேபோன்று 2 (11) ஆசிரியர் சேவையைச் சேர்ந்த ஒருவருக்கு தற்போது கிடைப்பது 39,175 ரூபாவாகும். 3 வருடங்களில் அது 66,880 ரூபாவாக அதிகரிக்கப்படும். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இவர்களுக்கு 56,236 ரூபா அடிப்படைச் சம்பளமாக கிடைப்பதுடன் ஏனைய கொடுப்பனவுகளுடன் 73,350 ரூபா கிடைக்கிறது. அவர் இந்த தரத்தில் 5 வருடம் சேவையில் இருப்பவராக இருந்தால் அவருக்கு 10,559 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது.
ஆசிரியர் சேவையில் 2(1) ஆசிரியர் ஒருவரின் தற்போதுள்ள அடிப்படைச் சம்பளம் 47,425 ரூபா. அவர்களின் சம்பளம் 81,780 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. அவருக்கு ஏப்ரல் முதலாம் திகதி 66,481 ருபா கிடைப்பதுடன் அதற்கு மேலும் 17,800 ரூபாவுடன் சுமார் 83 ஆயிரம் ரூபா கிடைக்கிறது. அவர் 5 வருட சேவையை பூரணப்படுத்தி இருந்தால் அவருக்கு ஏப்ரல் முதலாம் திகதி 13,154 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது.
முதலாம் தரத்தில் இருக்கும் ஆசிரியரின் தற்போதைய சம்பளம் 56,770 ரூபா அது 3 வருடங்களில் 98,580 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இவருக்கு 13,793 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது. இந்த தரத்தில் 5 வருட சேவையை பூர்த்தியாக 15,578 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது. ஏப்ரல் மூதலாம் திகதி இவர்களுக்கு 78,063 ரூபாவுடன் மேலும் 17,800 ரூபா கிடைக்கிறது.
அதேபோன்று அதிபர் சேவையில் 3 ஆம் தரத்தில் இருப்பவருக்கு தற்போது 42,175 ருபா அடிப்படைச் சம்பளமாக கிடைக்கிறது அது 72,280 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. ஏப்ரல் முதலாம் திகதிக்கு இவர்களின் அடிப்படைச் சம்பளம் 52,456 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. 10,081 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது. இந்த தரத்தில் 5 வருட சேவையுடைய அதிபருக்கு 11,391 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது.
அதிபர் சேவை 2 இல் தற்போதுள்ள ஆரம்பள சம்பளம் 48,685 ரூபா அது 86,370 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. அவருக்கு ஏப்ரல் மாதம் 61,240 ரூபாவுடன் 17,800 ரூபா கிடைக்கிறது. அதிபர் சேவை 1 ஆம் தரத்தில் தற்போதுள்ள அடிப்படைச் சம்பளம் 58,345 ரூபா. அது 3 வருடத்தில் ஒரு இலட்சத்தி 3,740 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. ஏப்ரல் முதலாம் திகதி இந்த அதிபர்களின் அடிப்படைச் சம்பளம் 73,273 ரூபாவுடன் 17,800 ரூபா கிடைக்கிறது. அவரின் சம்பள அதிகரிப்பு 14,868 ரூபாவாகும். 5 வருட சேவையை பூர்த்திசெய்தவரின் சம்பள அதிகரிப்பு 16,848 ரூபாவாகும் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment