மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியீடு ! மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கலாம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 24, 2025

மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியீடு ! மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கலாம்

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (23) வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை - 323,900
தோற்றியவர்களின் எண்ணிக்கை - 319,284

வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளி பெற்றவர்களின் எண்ணிக்கை - 51,244

அத்தோடு, எவரேனும் பரீட்சார்த்திகளுக்கு புள்ளிகள் தொடர்பாக மேன்முறையீடு செய்துகொள்ள வேண்டிய தேவை இருப்பின் 2025 ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 2025 பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும்.

No comments:

Post a Comment