மீண்டும் சர்ச்சையில் அர்ச்சுனா எம்.பி. ! நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

மீண்டும் சர்ச்சையில் அர்ச்சுனா எம்.பி. ! நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து சட்ட நடவடிக்கை

யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா நேற்றையதினம் (20) அநுராதபுரம் பகுதியில் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.

போக்குவரத்து சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் இன்றையதினம் (21) நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இதன்போது இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துகள் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலானதா எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனதுங்க குறிப்பிட்டார்.

போக்குவரத்து சட்டம், தண்டனைக் கோவைச் சட்டங்களின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment