காணாமல் போயுள்ள சிறுவன் ! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

காணாமல் போயுள்ள சிறுவன் ! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கடந்த 30 நாட்களாக காணாமல் போயுள்ள சிறுவன் ஒருவனை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் ஜனவரி மாதம் 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 04 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள சிறுவனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் 071 8591691, 034 2222222 அல்லது 034 2222223 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயுள்ள சிறுவனின் விபரங்கள் 

பெயர்
ஜாசல் மொகமட்

வயது
15

முகவரி
இல. 121/05 ஏ, மஃபுர் கிரிசன்ட் , களுத்துறை தெற்கு

அங்க அடையாளம்
05 அடி உயரம்

No comments:

Post a Comment