(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மன்னார் மாவட்ட செயலாளருக்கு எனது உத்தியோகபூர்வ முத்திரை பதித்து அனுப்பிய கடிதத்தை மாவட்ட செயலகம் ஏற்றுக் கொள்ளாது திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) சிறுப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட செயலாளருக்கு எனது உத்தியோகபூர்வ சீலுடன் பாராளுமன்ற முத்திரையுடன் பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்து மாவட்ட செயலகத்தினால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. இது பாரியளவில், பாராளுமன்ற சிறப்புரிமை மீறும் செயலாகும்.
அதனால் எனது உத்தியோபகபூர்வ முத்திரை பதித்து அனுப்பிய பதிவுத் தபாலை மன்னார் மாவட்ட செயலகம் ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டு, எனக்கு திருப்பி அனுப்பியது ஏன் என்பது தொடர்பில் தேடிப்பார்த்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சந்தன அபேரத்ன பதிலளிக்கையில், பாராளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்ட சம்பவத்துக்கு கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். அது தொடர்பில் விசாரணை நடத்தி பொருத்தமான நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment