பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (06) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இக்கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா குணவர்தன ஆகியோரை பிணையில் விடுவிக்க நுகேகொட நீதவான் திருமதி ருவினி ஜயவர்தன நேற்று (05) உத்தரவிட்டிருந்தார்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கையை பரிசீலித்த நீதவான், ரூ. 25,000 ரொக்கம், ஒரு மில்லியன் ரூபா கொண்ட 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment