நாடளாவிய ரீதியிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

நாடளாவிய ரீதியிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

நாடளாவிய ரீதிலுள்ள தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் (2025) நடாத்தப்படும் இலவச பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த பாடநெறிகள், அவற்றுக்கான தகைமைகள் மற்றும் அவை நடைபெறும் தொழில்நுட்பக்கல்லூரிகள் தொடர்பான முழு விபரங்களை 2024 நவம்பர் 22 வர்த்தமானியில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத்திகதி - 2024.12.15

Link

முழு நேர பாடநெறிகள் அனைத்தும் இலவசமாக நடைபெறும். பதிவுக் கட்டணம் மாத்திரம் ரூ. 2,500 அறவிடப்படும்.

தெரிவுசெய்யப்பட்ட பாடநெறிகளை தொடரும் வசதி குறைந்த மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ. 4 000 உதவிக் கொடுப்பனவு வழங்கப்படும்.

சலுகை கட்டணத்தில் புகையிரத மற்றும் பஸ் பருவகால சீட்டு வழங்கப்படும்.

கற்கைநெறிகளின் முடிவில் மாணவர்கள் அரச / தனியார் நிறுவனங்களில் 06 மாத தொழிற்பயிற்சிக்காக அனுப்பப்படுவர்.

ஒன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு

மேலதிக விபரங்களுக்கு 011 234 88 93

No comments:

Post a Comment