எதிர்வரும் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் பிரச்சாரக் காலம் நிறைவடைகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பொதுத் தேர்தல் தேர்தல் முடிவடையும் நேரம் வரை மௌன காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறும் எந்தவொரு நபரையும் கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த நாட்களில் தபால் மூலம் வாக்காளிக்க தவறிய வாக்காளர்கள் இன்றும் (07) நாளையும் (08) தமது பணியிடத்திற்கு அமைய மாவட்ட செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அமைதியான காலம் தொடங்குகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது.
மேலும் வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்கு கேட்க முடியாது, வீடு வீடாக செல்ல முடியாது என்று அனைத்து வேட்பாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சட்டவிரோத செயல். மத ஸ்தலங்கள் மற்றும் மத குருமார்கள் மற்றும் அவர்களின் மத நடவடிக்கைகளை விளம்பரத்திற்காக பயன்படுத்த முடியாது எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment