மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது A/L பரீட்சை - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 27, 2024

மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது A/L பரீட்சை

தற்போது நடைபெற்றுவரும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையை மீண்டும் தற்காலிகமாக டிசம்பர் மாதம் 03 வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (28) முற்பகல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்தார்.

ஏற்கனவே நவம்பர் மாதம் 27, 28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பாடங்கள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை தொடர்பான மீளாய்வின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அதற்கமைய, நவம்பர் மாதம் 27 முதல் டிசம்பர் மாதம் 03 வரை நடைபெறவிருந்த பாடங்கள் இடைநிறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சைகள் நேர அட்டவணையின்படி பரீட்சைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில், நவம்பர் மாதம் 27 முதல் டிசம்பர் மாதம் 03 வரை திட்டமிடப்பட்டுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் டிசம்பர் மாதம் 21 - 31 வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த நாட்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட குறித்த பரீட்சை அட்டவணைக பின்னர் வெளியிடப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment