கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்ட ரூபா 3 கோடி பெறுமதியான சிகரெட்டுகள் - News View

About Us

About Us

Breaking

Monday, November 11, 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்ட ரூபா 3 கோடி பெறுமதியான சிகரெட்டுகள்

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய இறக்குமதி முனையத்திற்கு விமான பொருட்கள் தபால் சேவை ஊடாக பெறப்பட்ட சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை இலங்கை சுங்கத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றிரவு (11) மேற்கொண்ட சோதனையில் குறித்த சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் உள்ள போலி முகவரிக்கு கணனி உபகரணங்கள் என குறிப்பிட்டு இந்த பொதி அனுப்பப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய இறக்குமதி விமான சரக்கு முனையத்திற்கு இதுவரை எந்தவொரு உரிமையாளரும் வராததால், நேற்றிரவு இலங்கை சுங்கத் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரிகள் குழு இந்தப் பொதியைத் திறந்து பார்வையிட்டுள்ளது.

குறித்த பொதியில் மேலும் 8 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

(கட்டுநாயக்க TKG கபில)

No comments:

Post a Comment