முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்குப் பெட்டிகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 12, 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்

இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வன்னி தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 137 வாக்களிப்பு நிலையங்களிற்கே இவ் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

23 கட்சிகளும், 25 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தமாக இம்முறை வன்னி தேர்தல் தொகுதியில் 432 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து இன்று புதன்கிழமை (13) காலை 7 மணி முதல் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலில் 1653 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment