கட்டுநாயக்க விமான நிலைய சரக்கு பொருள் கிராமம் ( Cargo Village ) UPS சுங்க பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் 8 கோடி ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவில் இருந்து 07 விமான தபால் பொதிகள் தொடர்பில் சுங்க மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளினால் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பொதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களாக இந்த பொதிகளை பெற்றுக்கொள்ள உரிமையாளர்கள் வராததால் அவர்களது முகவரிகளை ஆய்வு செய்தபோது அவை போலி முகவரி என உறுதியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 07 கிலோ 021 கிராம் ஐஸ் போதைப்பொருள், 01 கிலோ 143 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 01 கிலோ 338 கிராம் மெண்டி என்ற இரசாயன போதைப்பொருள் ஆகியவை அடங்கியுள்ளன.
இந்த போதைப்பொருள் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment