ரயில் நிலைய அதிபர்கள் திடீர் வேலைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 30, 2024

ரயில் நிலைய அதிபர்கள் திடீர் வேலைநிறுத்தம்

ரயில் நிலைய அதிபர்கள் திடீர் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

பயணச்சீட்டு வழங்கும் பணிகளில் இருந்து இன்று (30) மாலை 4.30 மணி முதல் விலகுவதாக ரயில் நிலைய அதிபர்கள் அறிவித்துள்ளனர்.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தவிசாளர் தசுமேத சோமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் கூடிய ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபை, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்காக எடுத்த தீர்மானமே இதற்கு காரணமாகும்.

பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சில சிக்கல்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுடன் இன்று (30) நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இந்த திடீர் வேலைநிறுத்தம் காரணமாக ரயில் பயணிகள் கடும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment