வாக்காளர் அட்டைகள் நாளை முதல் விநியோகம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 26, 2024

வாக்காளர் அட்டைகள் நாளை முதல் விநியோகம்

(இராஜதுரை ஹஷான்)

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவடையும்.

பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 (வியாழக்கிழமை) நடைப்பெறவுள்ளது. வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது. 

இதற்கமைய இம்முறை அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 5,464 வேட்பாளர்கள், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3,357 வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் 8,821 பேர் போட்டியிடுகின்றனர்.

இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (26) தபால் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது. 

வாக்காளர் அட்டை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படுவதால் தபால் சேவையாளர்களின் சகல விடுமுறைகளும் பொதுத் தேர்தல் நிறைவடையும் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. 

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை நாளை முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தபால்மூலம் விநியோகிக்கப்படும்.

இம்முறை பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு 759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், 2,1160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 738,050 அரச உத்தியோகஸ்த்தர்கள் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் புதன்கிழமை (30) நடைபெறவுள்ளது. அத்துடன் நவம்பர் மாதம் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், இத்தினங்களில் வாக்களிக்காதவர்கள் நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும்.

No comments:

Post a Comment