ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 23, 2024

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ​​​​ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கமைவாக அவர் இன்று (23) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று (22) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவொன்றை வெளியிடுமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கமைய முன்னாள் அமைச்சருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment