மக்கள் கட்சியில் இணைந்த மைத்திரியின் மகன் தஹம் மற்றும் ராஜிகா விக்ரமசிங்க தாயக - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2024

மக்கள் கட்சியில் இணைந்த மைத்திரியின் மகன் தஹம் மற்றும் ராஜிகா விக்ரமசிங்க தாயக

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தஹம் ஆகியோர் இன்று (03) தாயக மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

கொழும்பில் உள்ள அக்கட்சியின் கட்சியின் தலைமையகத்தில் வைத்து அவர்கள் தாயக மக்கள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியபட்டியல் ஊடாக பாராளுமன்றம் பிரவேசித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க, தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட மற்றும் தெதிகம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனா, பொலன்னறுவை மாவட்ட தாயக மக்கள் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளராக சமிந்து குமாரசிங்கவும், கண்டி மற்றும் உடுநுவர மாவட்ட இணைப்பாளராக தக்சில பிரேமசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி ஹேவாஹெட்ட அமைப்பாளராக சஞ்சீவ சுரவீரவும் கண்டி யட்டிநுவர அமைப்பாளராக தக்சில செனவிரத்னவும் ரத்கம அமைப்பாளராக துசித திலங்க ஜயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment