மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கராத்தே பயிற்றுவிப்பாளர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 30, 2024

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கராத்தே பயிற்றுவிப்பாளர் கைது

கம்பஹா, தொம்பே கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

16 மற்றும் 13 வயதுடைய இரு மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவிகள் இருவரும் கல்வி கற்கும் அதே பாடசாலையில் கராத்தே பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபர் கராத்தே பயிற்றுவிக்கும்போது இந்த இரு மாணவிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment