எதிர்வரும் சனிக்கிழமை (01) ஹொங்கொங்கில் ஆரம்பமாகும் ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று (30) ஹொங்கொங் நோக்கி புறப்பட்டது.
சர்வமத ஆசிகளைத் தொடர்ந்து 8 பேர் கொண்ட குழு இவ்வாறு புறப்பட்டது.
அணிக்கு 6 பேர் கொண்ட ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டித் தொடரில் ஒரு இன்னிங்ஸிற்காக 5 ஓவர்கள் பந்துவீசப்படும் என்பதோடு விக்கெட் காப்பாளரைத் தவிர அனைத்து வீரர்களும் ஒவ்வொரு ஓவர் பந்து வீச வேண்டும்.
சகல துறை ஆட்டக்காரர்களுக்கான போட்டித் தொடராக கருதப்படும் இப்போட்டித் தொடர் 1992 முதல் இடம்பெற்று வருவதோடு, 8 முதல் 12 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடரின் நடப்புச் சம்பியனாக தென்னாபிரிக்க அணி விளங்குகின்றது. இத்தொடரில் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 முறை இப்பட்டத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment