தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை அறிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விசாரணைகளின் மூலம் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசிந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
கசிய விடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment