பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ள மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 4, 2024

பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ள மனுஷ நாணயக்கார

வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறை பற்றிய பொய்யான அறிக்கையொன்றை வெளியிட்ட பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

ஆதாரமற்ற அறிக்கையினை வெளியிட்டமையினால் தமது நற்பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்துக்கு 500 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு மனுஷ நாணயக்கார தனது சட்டத்தரணிகள் மூலம் ஆனந்த கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சரின் உறவினருக்கு சொந்தமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை அனுப்பி பெருத்தொகையான பணத்தை அவர்கள் ஈட்டியுள்ளதாக ஆனந்த சாகர தேரர் தெரிவித்த அறிக்கையில் எந்த அடிப்படையும் இல்லை எனவும் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.

ஆனந்த சாகர தேரர் அவதூறு செய்யும் நோக்கில் வேண்டுமென்றே தனது பெயரை பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவதூறு செய்தமைக்கு எதிராக 14 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். அதனை வழங்க தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த சட்டக் கட்டணங்கள் உட்பட்ட செலவினங்கள் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அக்கடிதத்தில் மனுஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment