கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான போதைப் பொருள் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 26, 2024

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான போதைப் பொருள்

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வரலாற்றில் மிகப்பாரிய அளவான குஷ் போதைப் பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

ரூ. 43 கோடியே 64 இலட்சத்து 80 ஆயிரம் (ரூ. 436.48 மில்லியன்) பெறுமதியான குஷ் போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டுவந்த பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

குறித்த நபர் 21 வயதான பிரிட்டிஷ் தேசிய பாதுகாப்பு சேவை அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் இன்று (26) மு.ப. 9.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் விரைவான வெளியேறும் பகுதியான கிரீன் சேனல் ஊடாக வெளியேறுவதற்காக வந்திருந்த குறித்த நபரின் வழக்கத்திற்கு மாறான நடத்தையை அவதானித்த விமான நிலைய சுங்க அதிகாரிகள், குறித்த நபரிடமிருந்த இரண்டு பயணப் பெட்டிகளை சோதனை செய்தபோது, இவ்வாறு பாரியளவான ‘குஷ்’ போதைப் பொருளை மீட்டுள்ளதோடு, சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குஷ் போதைப் பொருளின் நிறை, 43.648 கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த குஷ் போதைப் பொருளுடன் குறித்த பிரித்தானிய பிரஜையை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment