நாட்டிலிருந்து வெளியேறினார் பஷில் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Thursday, September 19, 2024

நாட்டிலிருந்து வெளியேறினார் பஷில் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை (20) காலை பயணமாகியுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளார்.

பசில் ராஜபக்ஷ இந்த விமான சேவைக்காக 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள Gold Route முனையத்தின் வசதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ துபாய் சென்று பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்வார் எனவும் அவர் அமெரிக்கா செல்வதற்கு எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையிலிருந்து வெளிநாடொன்றிற்கு சென்றுள்ளதை  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதி செய்துள்ளது.

இன்று காலை அவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள அவர் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளிற்காக நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக அவர் முன்னரே வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார நடவடிக்கைகளிற்காக அவர் தனது பயணத்தினை அவர் தாமதித்தார் என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து வெளியேறவுள்ளது குறித்து அவர் கட்சிக்கு ஏற்கனவே  அறிவித்துள்ளார். 

அதேபோன்று மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பின்னர் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளிற்கு கட்சிக்கு தலைமை தாங்குவதற்காக மீண்டும் நாட்டிற்கு திரும்புவேன் என அவர்  தெரிவித்துள்ளார் என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment