இரண்டு வருடங்களின் பின் இடம்பெறும் பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த் தேக்கத்திலிருந்து நாளை (28) அதிகாலை முதல் முற்றாக நீர் வெளியேற்றப்படவுள்ளது.
இதன் காரணமாக அங்கிருந்து நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு நாளை (28) அதிகாலை 1.30 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 6.00 மணி வரை 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், ஹரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, அக்குரணை, குண்டசாலை பிரதேச செயளாலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள், ரஜவெல்ல, சிறிமல்வத்தை , அம்பிட்டிய, ஹந்தான,மடவல,கட்டுகாஸ்தோட்டை மற்றும் மாவத்தகம உற்பட பல பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேநேரம், குறித்த நீர்த் தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரானது மகாவலி கங்கைக்கு விடுவிக்கப்படவுள்ளமையினால், குறித்த ஆற்றில் மீன்பிடிப்பதனையும் ஆற்றினுள் இறங்குவதையும் தவிர்க்குமாறு மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.
No comments:
Post a Comment