சீன நாட்டின் நன்கொடையாக மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சீருடைகள், 2025ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் வழங்கப்படவுள்ளன.
சீன தூதுவர் மற்றும் சீன அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நடத்திய கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
43 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் 825 பிரி வேனாக்களுக்குமான அங்கிகளும் பொதி செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய இதன் முதலாவது தொகுதி எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதியும் , இரண்டாவது தொகுதி நவம்பர் மாதம் 21ஆம் திகதியும் மூன்றாவது தொகுதி டிசம்பர் மாதம் 20ஆம் திகதியும் இலங்கைக்கு அனுப்பிவைக்க சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்த சீருடைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால் அரசாங்கத்திற்கு 7,000 மில்லியன் ரூபாவை சேமிக்கக்கூடியதாகவுள்ளது.
2025 ஆம் ஆண்டின் புதிய பாடசாலை தொடக்கமான ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சீருடைகளை விநியோகிக்க கல்வி அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையை வழங்கிய சீன அரசாங்கத்திற்கும் சீன தூதுவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment