ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் பதவியை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுக்கு மீள வழங்க இன்று கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று மருதமுனை தனியார் விடுதியில் இடம்பெற்ற உயர்பீட கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் மற்றும் உச்சபீட உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் இடைநிறுத்தப்பட்ட விடயம் மற்றும் அவரால் வழங்கப்பட்ட பதில் கடிதம் என்பன ஆராயப்பட்ட பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நூருல் ஹுதா உமர்
No comments:
Post a Comment