மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 9, 2024

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

உயர்தரப் பரீட்சையில் (2022) சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் கற்கைகளை தொடர்வதற்கான செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கற்கை நெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

உயர்தரத்தில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களுக்கே, இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதில் அதிகபட்சமாக 08 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு ஏழு மாணவர் குழுக்களின் கீழ் உள்ள 17,313 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இந்தக் கடன் திட்டத்தின் எட்டாவது தொகுதியாக உள்வாங்கப்படவுள்ளனர். 

இது தொடர்பில் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படவுள்ள உத்தேச கற்கைநெறிகள் தொடர்பான முன்மொழிவுகள் தற்போது அழைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment